News December 20, 2024
புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு

புதுவையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ₹2- ₹8 வரை கட்டணம் உயரும். புதுவையில் உயர்த்தப்பட்ட இந்தக் கட்டண உயர்வானது தமிழக மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக புதுவையில் இருந்து கடலூருக்கு ₹20இல் இருந்து ₹25 ஆகவும், விழுப்புரத்திற்கு ₹25இல் இருந்து ₹30ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பக்கத்து மாவட்ட மக்களும் பாதிப்புக்கு ஆளாவர்.
Similar News
News September 2, 2025
BREAKING: தமிழகத்தில் மாஸ்க் அவசியம்.. அரசு அறிவிப்பு

TN-ல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
News September 2, 2025
வாக்கு திருடர் சர்ச்சை: BJP Vs CONG

பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவிற்கு டெல்லியில் 2 EPIC நம்பர் இருப்பதாக போட்டோ வெளியிட்டு பாஜக விமர்சித்துள்ளது. ஆனால், தனது பெயரை நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், இன்னும் ஏன் பெயர் இருக்கிறது என்பதை ECI விளக்க வேண்டும் என்றும் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.
News September 2, 2025
SCIENCE: உங்கள் மூளையை உங்கள் மூளையே சாப்பிடுமா?

தூங்காமல் இருப்பதால் நமது மூளை தன்னைத்தானே சாப்பிடுமா? மூளையில் உள்ள இறந்த செல்களை சாப்பிட(அகற்ற) microglia, astrocytes என இருவகை செல்கள் உள்ளன. போதுமான தூக்கம் இல்லாதபோது, இவை தீவிரமாக செயல்பட்டு மற்ற செல்களையும் கூட அகற்றலாம் என சந்தேகம் உள்ளது. எனினும், இது ஆய்வில் உறுதியாகவில்லை. எனினும் சில நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் டாக்டர்கள். நல்ல தூக்கமே இதற்கு சிறந்த மருந்தாகும். SHARE IT!