News March 17, 2024
வனப்பகுதியில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

குமுளி மலைச்சாலையில் கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட லோயர்கேம்ப் அமராவதி வனப்பகுதியில் துா்நாற்றம் வருவதாக குமுளி போலீசாருக்கு நேற்று (மார்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கருகி, அழுகி கிடந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
தேனி: 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். Instagram மூலம் இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 17, 2026
தேனி அருகே ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தேனி மாவட்டம், குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டி. இவருக்கு ஞானேஸ்வரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதையடுத்து நேற்று திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப்பதிவு.
News February 17, 2026
தேனி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேவாரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேவாரம், மீனாட்சிபுரம், மூணான்டிபட்டி, பி.ஆர். புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைசேரி பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT


