News June 25, 2024
முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டில் திருட்டு

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சின்னம்மாபுரம் மினிகாடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த இரும்பு மேஜை டிராயரில் இருந்து ₹50 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
டிச.5-ல் இந்தியா வரும் புடின்!

Russia-India Forum-ல் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் புடின் டிச.5-ம் தேதி இந்தியா வருகிறார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு புடின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டதாக USA அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் இதுபற்றி இந்தியா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், புடின் இந்தியா வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 12, 2025
உலகின் டாப் 10 பணக்காரர்கள்.. நம்பர் 1 யார் தெரியுமா?

நவம்பர் 1, 2025 நிலவரப்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10-ல் உள்ளவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள். அவர்கள் யார், எவ்வளவு சொத்து மதிப்புடன் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நம்பர் 1 இடத்தில் யாரென்று தெரியுமா? போட்டோக்களை பார்த்து கமெண்ட் பண்ணுங்க.
News November 12, 2025
திமுக, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்

ஈரோட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் SG சூர்யா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக, அதிமுக பம்பரமாக சுழன்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பாஜகவும் இணைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் விரைவில் பாஜக மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாம்.


