News June 25, 2024
முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டில் திருட்டு

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சின்னம்மாபுரம் மினிகாடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த இரும்பு மேஜை டிராயரில் இருந்து ₹50 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹200 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹440 உயர்ந்திருப்பதால் ஒரே நாளில் ₹640 கூடியுள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,580-க்கும், 1 சவரன் ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
News October 13, 2025
RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.
News October 13, 2025
BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.