News June 25, 2024
முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டில் திருட்டு

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சின்னம்மாபுரம் மினிகாடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த இரும்பு மேஜை டிராயரில் இருந்து ₹50 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
14 வயது சிறுமி, 13 வயது சிறுவன் காதல்… அதிர்ச்சி!

14 வயது சிறுமியும், 13 வயது சிறுவனும் காதல் மயக்கத்தில் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, விஜயவாடாவில் சிறுமியை கூட்டிக் கொண்டு கையில் அப்பாவின் மொபைல் போன் மற்றும் ₹10 ஆயிரத்துடன் வந்து இறங்கியுள்ளான். ஹோட்டல் ரூம் தேடிய சிறுவனை பார்த்து சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீஸுக்கு தகவல்தர, இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரே கவனிங்க!
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
News November 28, 2025
அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


