News February 13, 2025
பும்ரா இல்லாதது இவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: கம்பீர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739422946812_1173-normal-WIFI.webp)
CT தொடரில் பும்ரா இல்லாதது ஷமி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். பும்ரா முக்கியமான வீரர் என்பது உண்மைதான் எனவும், இருப்பினும் அவர் இடத்தை நிரப்ப மேற்கூறிய வீரர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள் என்றும் கம்பீர் கூறியுள்ளார். மேலும், ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2025
லோக்சபா ஒத்திவைப்பு: மீண்டும் மார்ச் 10ல் கூடுகிறது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443164314_1328-normal-WIFI.webp)
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முதல் பகுதியின் இறுதி நாளில் புதிய வருமான வரி மசோதா, வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டன. லோக் சபாவை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் புதிய வருமான வரி மசோதாவை FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடக்கிறது.
News February 13, 2025
பழம்பெரும் பாடகர் ‘பிரபாகர் கரேகர்’ காலமானார்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739431978518_347-normal-WIFI.webp)
இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர்(80) நேற்று மும்பையில் காலமானார். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர், தன் குரலினிமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபலமான பல கலைஞர்களுக்கு இவர் குருவாகவும் இருந்துள்ளார். பாடுவது மட்டுல்லாமல், இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது, சர்வதேச நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் எனப் பல வழிகளில் இவர் பங்காற்றியுள்ளார்.
News February 13, 2025
நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739441055545_1142-normal-WIFI.webp)
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.