News April 28, 2025
பம்பர் ஆஃபர்.. அரசு விரைவுப் பஸ்சில் இலவச பயணம்!

இந்த சம்மரில் அரசு விரைவுப் பஸ்சில் பயணித்தால், குலுக்கல் முறையில் 75 பேருக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜுன் 15-ம் தேதி வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து இந்த பரிசு அளிக்கப்படும். முதல் பரிசாக, 25 பேர் ஓராண்டுக்கு 20 முறையும், 2-ம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3-ம் பரிசாக 25 பேர் 5 முறையும் பயணிக்கலாம். இப்பவே கிளம்புங்க!
Similar News
News November 24, 2025
இன்று புதிய தலைமை நீதிபதி பதவியேற்கிறார்

இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக (CJI) சூர்யகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் பூடான், கென்யா, மலேசியா, மொரிசியஸ், இலங்கை, நேபாள் தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர். CJI பதவியேற்பு விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஹரியானாவிலிருந்து பதவியேற்கும் முதல் CJI சூர்யகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வாழனும், செமயா வாழனும்: மிருணாள் தாகூர்

தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதே தனி கெத்து தான். அப்படித்தான், தனது அம்மாவை காரில் ஏற்ற மறுத்த உறவுக்காரர்களுக்கு முன், பென்ஸ் கார் வாங்கி, அதில் அம்மாவை அமர வைத்து உலா வந்து கெத்து காட்டியுள்ளார் மிருணாள் தாகூர். உறவினர்கள் தனது அம்மாவை அவமானப்படுத்தியபோது ஏற்பட்ட வைராக்கியமே, தான் கார் வாங்கியதற்கான காரணம் என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.


