News August 5, 2024

கட்டட அனுமதிக்கட்டணம் 2 மடங்காக உயர்வு

image

கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. சுயசான்று அடிப்படையில் அரசு உடனடி கட்டட அனுமதி வழங்குகிறது. ஆனால், இதற்கு இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 1 சதுர அடிக்கு ₹60ஆக இருந்த கட்டணம், தற்போது ₹125வரை உயர்ந்துள்ளது. இதனால், 1,000 சதுர அடி கட்ட ₹60,000 கூடுதல் செலவாவதாக புகார் எழுந்துள்ளது.

Similar News

News August 14, 2025

உங்களுக்கு high BP இருக்கா? இதை தவிருங்கள்

image

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு (high BP) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: காஃபி -இதிலுள்ள கஃபைன் BP-யை அதிகரிக்கும் *சர்க்கரை -உடல்பருமன், BP-யை அதிகரிக்கும் *பதப்படுத்தப்பட்ட இறைச்சி – இதில் உப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் BP உயரும் *பீநட் பட்டர் – இது கொழுப்பை அதிகரித்து BP-யை உயர்த்தும் *மைதா பிரெட் *உப்பு – அதிகமானால், BP உயரும். ஆக, தினசரி 3 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம்.

News August 14, 2025

ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க முடிவு?

image

டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. இதனால், டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியிலும், ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தள்ளுபடி குறைந்ததால் எண்ணெய் வாங்குவதை பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த மாதம் நிறுத்தி இருந்தன.

News August 14, 2025

அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிவு: கவர்னர்

image

TN-ல் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக RN ரவி கூறியுள்ளார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள உரையில் வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களை பெற்றவர்களாக மாணவர்கள் திகழ்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?

error: Content is protected !!