News March 15, 2025
பச்சைத்துண்டுடன் பட்ஜெட்

TN சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதையொட்டி திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்தபடி பேரவைக்கு வந்திருந்தனர். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால், அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்ற கருத்துடன் தனது வேளாண் பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார்.
Similar News
News March 15, 2025
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் போனி ப்ளூ

12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன் உறவு மேற்கொண்டு சாதனை படைத்ததாக கூறும் போனி ப்ளூவின் புதிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் கான்கன் (Cancun) நகரில் பதின்ம வயதினருடன் உறவு மேற்கொள்ள கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனத்தை சம்பாதித்துள்ளது. 25 வயது ஆபாச பட நடிகையான இவரது போக்குக்கு ஒரு முடிவே இல்லையா? என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
News March 15, 2025
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கும், ஏற்கெனவே முதல்வர் கூறியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10% பேருக்கு கூட வேலை வழங்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News March 15, 2025
பொய்யும் புரட்டுமான பட்ஜெட்: அண்ணாமலை

வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முன்னதாக இதை நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரியகருப்பன் ஏற்க மறுத்ததாக விமர்சித்தார். மேலும், நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.