News March 10, 2025
பட்ஜெட் அமர்வு: நோட்டீஸ் வழங்கிய TN எம்.பி.க்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கக் கோரி ராஜ்யசபாவில் திமுக எம்.பி திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே போல், மணிப்பூர் வன்முறை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 10, 2025
மும்மொழிக் கொள்கையை TN ஏற்காது; கனிமொழி திட்டவட்டம்

மும்மொழிக் கொள்கையை TN நிச்சயம் ஏற்காது என திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரதானின் பேச்சுக்கு பதிலளித்த அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக MPகள் ஒருபோதும் கூறியதில்லை என்றார். TN MPகள் நாகரீகமற்றவர்கள் என பேசியது வருத்தம் அளிப்பதாகவும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மனதை புண்படுத்தியிருந்தால் அந்தக் கருத்தை வாபஸ் பெறுவதாக பிரதான் கூறினார்.
News March 10, 2025
நடிகைக்கு அரசு நிலம் ஒதுக்கீடா? இறுகும் சிபிஐ பிடி

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2023ல் அவரது நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
News March 10, 2025
லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் கேன்சல்!

நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.