News January 31, 2025
ஏழை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

ஏழைகளுக்கு செல்வங்கள் வழங்க மகா லட்சுமியை வணங்குவதாக பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார். நாட்டின் மறுசீரமைப்பு, செயல்பாடுகளை குறிக்கோளாக கொண்டு NDA அரசு செயல்படுகிறது என்றார். மேலும், 2025-2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால், நாளை பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News March 4, 2026
ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
News March 4, 2026
கிளம்பினார் விஜய்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.
News March 4, 2026
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.


