News March 15, 2025
பட்ஜெட் அதிருப்தி – போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 15, 2025
சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. 4 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.
News March 15, 2025
2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம்…

திபெத்தில் கடந்த 2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவில் 3.5 முதல் 4.3 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 12.49 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. யுரேசியன் தட்டுப்பகுதியில் திபெத் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
News March 15, 2025
மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.