News March 29, 2025
CSKவை கிண்டலடித்தவர் மீது கொடூரமாக தாக்குதல்!

CSK அணியை கிண்டல் செய்த சென்னையை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவரை, மது போதையில் இருந்த 7 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர், சென்னை ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், தாக்கியவர்கள் அனைவருமே ஜீவரத்தினத்தின் நண்பர்கள்தானாம்.
Similar News
News April 1, 2025
இரவில் பல் துலக்குவது அவசியமா?

ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரவு தூங்குவதற்கு முன் துலக்குவது மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்போதுதான், நாம் சாப்பிட்ட உணவின் மிச்சங்கள் பற்களில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
News April 1, 2025
கூந்தலை துண்டித்து போராட்டம்

கேரளாவில் தேசிய சுகாதாரப் பணியாளர்களின் (ASHA) போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரிட்டயர்மென்ட் பெனிபிட், பணிநிரந்தரம், மருத்துவ வசதி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரி அவர்கள், திருவனந்தபுரத்தில் கடந்த 50 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்காத நிலையில், தங்கள் கூந்தலை வெட்டியும், மொட்டையடித்தும் இவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
News March 31, 2025
மும்பை அணி அபார வெற்றி…!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக பௌலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பையில், ரிக்கெல்டன்(62*) அதிரடியாக அரைசதம் விளாசினார். இதனால், அந்த அணி எளிதில் வெற்றிபெற்றது.