News April 1, 2025
ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு அவரது மைத்துனரும், மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள ஆதவ் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.
News April 2, 2025
CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <
News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.