News April 27, 2024
விரைவில் பொதுப்பணிக்கு திரும்பும் பிரிட்டன் மன்னர்

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பொதுப்பணிக்கு திரும்ப இருப்பதாக பிரிட்டன் அரச குடும்பம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மன்னர் சார்லஸின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில், இத்தகவலை பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
கோலி, ரோகித் ஓய்வு பெற அழுத்தம்?

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்குப்பின் கோலி, ரோகித் ஓய்வு பெற BCCI அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 2027 ODI WC-ன் போது கோலிக்கு 39, ரோகித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை BCCI மறுத்துள்ளது. ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்திருந்தால் அவர்களே தெரிவித்து இருப்பார்கள் என BCCI மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 11 – ஆடி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News August 11, 2025
இன்று வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.