News October 25, 2025

இதனால் இந்தியாவிற்கு அவப்பெயர்: BCCI

image

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Similar News

News January 17, 2026

AR ரஹ்மான் அதிக வெறுப்பு கொண்ட மனிதர்: கங்கனா

image

AR ரஹ்மான் போல அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என பாஜக MP கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மத ரீதியான பாகுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததாக ARR சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, ‘எமர்ஜென்சி’ பட கதையை சொல்ல வந்தபோது, தன்னை சந்திக்கக்கூட ARR மறுத்துவிட்டதாகவும், வெறுப்பால் அவர் பார்வையற்றவர் ஆகிவிட்டதாகவும் கங்கனா விமர்சித்துள்ளார்.

News January 17, 2026

தவெகவில் இணைகிறாரா முன்னாள் மத்திய அமைச்சர்?

image

தஞ்சையில் நடந்த மகளிர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டதால், திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் S.S.பழனிமாணிக்கம், தவெகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தன்னை அடையாளப்படுத்தியது திமுகதான். வரும் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன், இல்லையென்றால் தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவேன். என் உயிர் மூச்சு உள்ளவரை திமுகதான் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News January 17, 2026

19 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற வீரர்

image

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்து, ₹8 லட்சம் மதிப்பிலான காரை தட்டிச் சென்றார். பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி, 2-வது இடத்தை பிடித்து பைக் பரிசு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!