News April 16, 2024
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுவதாக அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதாகவும் விமர்சித்தார். ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலையே இருப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
Similar News
News December 31, 2025
அழகின் சிகரம் மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். சேலையில் உள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பார்த்தாலே ஏதோ ஒரு ஸ்பார்க் ஆகிறது நெஞ்சுக்குள். கவனத்தை ஈர்க்கும் தோற்றம், இனிமையான சிரிப்பு, வானவில் போன்று வியக்கும் அழகு என அனைத்து உவமைகளும் சொந்தம் கொண்டாட துடிக்கும் ஓவியமாக இருக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 31, 2025
சீனாவை முந்தியது இந்தியா!

சீன கார்களை விட இந்தியாவில் தயாரித்த கார்களே இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. லைட்ஸ்டோன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அங்கு விற்கப்பட்ட மொத்த கார்களில் ஏறக்குறைய பாதி இந்தியாவில் தயாரானவை. நடப்பாண்டில் SA-ல் விற்கப்பட்ட வாகனங்களில் 49% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதே வேளையில் சீனாவில் இருந்து 17.1% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
News December 31, 2025
₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.


