News April 16, 2024

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்

image

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுவதாக அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதாகவும் விமர்சித்தார். ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலையே இருப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

Similar News

News December 13, 2025

மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க.

News December 13, 2025

இந்தியா-ஓமன் FTA ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி

image

இந்தியா-ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. PM மோடி டிச.17, 18 தேதிகளில் ஓமனுக்கு செல்லும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. FTA மூலம் இருநாடுகளிலும், சுங்க வரி வெகுவாக குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இதனால், இந்திய பொருள்கள் ஓமனிலும், ஓமனின் பொருள்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்.

News December 13, 2025

அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

image

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.

error: Content is protected !!