News April 3, 2025
BREAKING: மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு

கோவை மாவட்த்தில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் சாமியார் வேடத்தில் வந்த நபர் வேலை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நாளை(ஏப்.3) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை ஒட்டி பலத்த பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News August 9, 2025
கோவை:10ம் தேதி இந்த ரயில் சேவை ரத்து

கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்தினர் இன்று கூறியதாவது: வரும் 10ம் தேதி காலை 9.40 மணிக்கு, போத்தனூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மெமு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல அன்று மதியம் 1.05 க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை வரும் மெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
News August 8, 2025
கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (09.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை வடக்கு மண்டலம் (வார்டு எண் -3) மடாலயம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 8, 2025
கோவை: பணம், தங்கத்துடன் இலவச திருமணம்!

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT