News October 26, 2025

BREAKING: விஜய்யின் திட்டம் வெளியானது

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டதில், 33 குடும்பத்தினர் பஸ் மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் விமானம் மூலம் நாளை வரவுள்ளனர். நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படும் அவர்களை, நாளை காலை 10 – மாலை 4 மணி வரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனையடுத்து, கட்சி பணியை முடுக்கிவிடும் அவர், மீண்டும் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர்: மது போதையில் வாலிபர்கள் அட்டூழியம்!

image

தேவலாபுரம் அடுத்த ஸ்டார் சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.12) இரவு அஸ்ரத் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகப்பன் (21), எல்.மாங்குப்பத்தை சேர்ந்த நிதிஷ் (20) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஸ்ரத்தாய் மற்ற இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

News January 14, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.

error: Content is protected !!