News October 6, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு

தவெக முக்கிய நிர்வாகிகள் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர்களாக இருந்த நம்பிக்கையானவர்களை கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களாக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கரூரில் பாதிக்கப்பட்டோரிடம் அவர் முதற்கட்டமாக வீடியோ காலில் பேச முடிவெடித்துள்ளாராம்.
Similar News
News October 6, 2025
அதிருப்தி.. விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவம் நடந்து 10 நாள்களாகியும் இதுவரை விஜய்யோ, தவெகவின் 2-ம் கட்ட தலைவர்களோ பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. மேலும், கரூர் செல்வதற்காக விஜய் தரப்பில் இருந்து கோர்ட்டையோ, போலீஸையோ அணுகவில்லை. இதனால், பலியானவர்களின் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளார்களாம். இதனை சரிசெய்ய தொடர் ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை சட்ட ரீதியாக சந்திப்பதென முடிவெடுத்துள்ளார்.
News October 6, 2025
தமிழ்நாடு மது விற்பனையில் எந்த இடம் தெரியுமா?

2025 நிதியாண்டில் மாநிலம் வாரியாக, விஸ்கி, வோட்கா, ரம், ஜின், பிராந்தி போன்ற மதுபானங்கள் விற்பனை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்திய மாநிலங்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. எந்த மாநிலம் எந்த இடத்தில் உள்ளது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், கடைசி இடம் யாருக்கு தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா? WAY2NEWS சர்வே

கரூர் துயரச் சம்பவத்துக்கு பின், விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பது அரசியலிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பி வே2நியூஸ் ஒரு சர்வே நடத்தியது. லட்சக்கணக்கான வாசகர்கள் இதில் வாக்களித்தனர். அதன்படி, சரிபாதி பேர் (50%) விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளது என்றும், 50% பேர் இல்லையென்றும் வாக்களித்துள்ளனர். உங்கள் கருத்து?