News October 2, 2025

BREAKING: சற்றுநேரத்தில் கட்சி அலுவலகத்தில் விஜய்

image

சென்னை பனையூர் இல்லத்தில் இருந்து 4-வது நாளாக தவெக தலைவர் காரில் வெளியே சென்றுள்ளார். சற்றுநேரத்தில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர், காந்தி, காமராஜர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு செல்லும் அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

Similar News

News October 2, 2025

விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்

image

விஜய் வெளியிட்ட வீடியோவில் தனக்கு உடன்பாடில்லை என சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் வீடியோவில் வெளிப்பட்டிருக்கும் எனவும், கரூரில் மட்டும் எப்படி இப்படி நடந்தது என அவர் கேட்டது தவறு என்றும் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு என்பது வாய்க்கரிசி எனவும், திரைப்பட வசனம் போல் விஜய் பேசியதாகவும் சாடியுள்ளார்.

News October 2, 2025

திருப்பதி சக்ர ஸ்நானம் PHOTOS

image

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, சக்ர ஸ்நானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடினர். காலை 6 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருடன் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மலையப்ப சுவாமிகளுக்கு திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News October 2, 2025

விஜய் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

image

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை பஸ், வேனுக்கு வாழை மரங்கள் கட்டி பூஜை செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, 41 உயிர்களை குடித்த வாகனத்திற்கு பூஜையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில், இதிலுமா அரசியல் செய்வீர்கள் என விஜய்க்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள்ளனர். உங்கள் கருத்தென்ன?

error: Content is protected !!