News October 18, 2025

BREAKING: தலா ₹20 லட்சம் வழங்கினார் விஜய்

image

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, விஜய் தரப்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 31, 2026

நாளை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

image

☛இனி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் ஏதேனும் 2 அம்சங்கள் தேவைப்படும்: PIN/PASSWORD, Registered Device, Finger Print, Face ID. ☛நாடு முழுவதும் E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ☛KYC இல்லாத FASTag கணக்குகள் முடக்கப்படும். ☛சில வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. ☛புதிய காப்பீட்டு பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும்.

News March 31, 2026

2 நாள்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வரும்: பியூஷ் கோயல்

image

தமிழகத்தில் மாநில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாள்களில் பட்டியல் வெளியாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News March 31, 2026

BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

image

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!