News December 29, 2024

BREAKING: தூத்துக்குடியில் டைடல் பூங்கா திறப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் ₹32.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நியோ டைடல் பூங்காவை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். 63,000 சதுரஅடி பரப்பளவில், 4 தளங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்க்கிங், ஜிம், ஃபுட் கோர்ட், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, விழுப்புரம், தஞ்சை, சேலம், கோவை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் டைடல் பூங்காக்களை CM திறந்து வைத்தார்.

Similar News

News July 10, 2025

276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

image

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2025

பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

image

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.

News July 10, 2025

தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்

image

அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங் (LC) பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது LC 40 & LC 44-ல் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக கார்த்திகேயன் & ஆஷிஷ்குமார் ஆகிய 2 கேட் கீப்பர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் எனத் தெரிய வந்த நிலையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!