News September 29, 2025
BREAKING: தவெக தலைவர்களை கைது செய்ய புறப்பட்டனர்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர்கள் N.ஆனந்த், CTR நிர்மல்குமார், மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், N.ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை, புதுச்சேரிக்கு போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 29, 2025
கருத்து சுதந்திரத்தில் உறுதியாக நிற்கும் எலான் மஸ்க்

கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் எலான் மஸ்கின் X தளம் அறிவித்துள்ளது. சஹ்யோக் போர்ட்டலை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை நீக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக X வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், இந்தியாவில் சேவைகளை வழங்க, இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்தது.
News September 29, 2025
PM மோடி தான் ஸ்கோர் செய்தார்: சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றதை, விளையாட்டில் ஆபரேஷன் சிந்தூர் என PM மோடி பாராட்டியது குறித்து சூர்யகுமார் யாதவ்விடம் கேட்கப்பட்டது. அதற்கு, நாட்டின் தலைவர், முன்களத்தில் நின்று போராடும் போது, தங்களை போன்ற கிரிக்கெட் வீரர்கள் எளிதாக விளையாட முடிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூரில் PM மோடி தான் ஸ்கோர் செய்ததாகவும், இந்த வெற்றியை நாடே கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
News September 29, 2025
தண்ணீரே குடிக்காத உயிரினம் எது தெரியுமா?

கங்காரு எலிகள் தனது வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாமல் இருக்கும். தான் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும் போது சிறிதளவு நீர் அதன் உடலில் சேருமாம். அதுவே இந்த எலிகளின் கிட்னிகள் செயல்பட போதுமானதாக இருக்கிறது. அத்துடன், நீரிழிவு நோய் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை எலிகள் ஆழமான மற்றும் குளிர்ச்சியான பொந்துகளை அமைத்து அங்கேயே தங்குகின்றனவாம். இந்த Interesting தகவலை SHARE பண்ணுங்க.