News April 16, 2025

BREAKING: காலையிலேயே குலுங்கிய தலைநகரம்!

image

டெல்லி-NCR பகுதிகளில், இன்று காலையே வலுவான நடுக்கங்கள் உணரப்பட்டன. தேசிய நில அதிர்வு மையம் (NCS) படி, ரிக்டர் அளவில் 5.9 ஆக உணரப்பட்ட இந்த பூகம்பத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியமாகும். தற்போது வரை பெரிதாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து ஆசிய கண்டத்தின் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 24, 2025

டிச.1-ல் குரூப்-1 முதன்மை தேர்வு தொடக்கம்

image

குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. Prelims-ல் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.

News November 24, 2025

இந்த பொம்மையால் குழந்தைக்கு ஆபத்து.. BIG ALERT!

image

குழந்தைகள் இருக்கும் வீட்டில் டெடி பியர் போன்ற சாஃப்ட் டாய்ஸ்கள் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் உங்கள் குழந்தையின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படலாம். ஆம், சாஃப்ட் டாய்ஸ்களில் உள்ள முடி எளிதில் உதிரக்கூடியவை. அந்த முடி குழந்தைகள் சுவாசிக்கும்போது அவர்களின் உடலுக்குள் போகலாம். இதனால் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

News November 24, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.

error: Content is protected !!