News October 13, 2025
BREAKING: விஜயகாந்த் வீட்டில் பரபரப்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் வீடு, தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விஜயகாந்த் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், அது புரளி என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம், CM ஸ்டாலின், ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 13, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹5,000 விலை உயர்ந்தது

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. இன்று(அக்.13) ஒரே நாளில் கிராமுக்கு ₹5 உயர்ந்ததால் ₹195-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 அதிகரித்து ₹1,95,000-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் பலரும் முதலீடு, ஆபரணங்கள் வாங்கத் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் முன்பதிவு செய்த 10 நாள்களுக்கு பிறகே வெள்ளி கிடைக்கும் என வியாபாரிகள் நேற்று அறிவித்திருந்தனர்.
News October 13, 2025
16-ம் நாள் முடிந்தது.. என்ன செய்ய போகிறார் விஜய்?

கரூர் துயரம் (செப்.27) நடந்து 3 நாள்களுக்கு பிறகு (செப்.30) சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டார் விஜய். ஆனால், அதன் பிறகு அவர் வெளியே தலைகாட்டாதது பேசுபொருளானது. இதனிடையே, அக்.17-ல் கரூருக்கு நேரில் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா கூறிய 16 நாள் துக்கமும் (அக்.12) முடிவடைந்துள்ளது. <<17990015>>SC<<>>-ன் தீர்ப்பும் இன்று வெளியாகும் நிலையில், விஜய் என்ன செய்ய போகிறார்?
News October 13, 2025
தொடர்ந்து சரியும் சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 82,300 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,217 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, ONGC, Dr Reddys Labs, Jio Financial, TCS, SBI உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.