News December 5, 2024

BREAKING: தமிழக அரசு “சிறப்பு லோன் “

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறு வணிகக் கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச.12 வரை நடைபெறுகிறது. விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு ₹1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் தரப்படுகிறது.

Similar News

News April 29, 2025

இபிஎஸ் பம்மியதற்கு, மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி

image

மாநில உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த EPS-க்கு 2026-ல் மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி; கரப்ஷன் ஆட்சியை நடத்திய இபிஎஸ், அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி ஆட்சி என்ற போதே இபிஎஸ்ஸின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக சாடினார்.

News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 29, 2025

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!