News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

image

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

image

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.

News September 14, 2025

அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

image

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!

News September 14, 2025

RECIPE: ஹெல்தியான ராகி லட்டு!

image

ராகி லட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்தை அளிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➤1 தேக்கரண்டி நெய்யில், 1 கப் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
➤இதில் ஏலக்காய் பொடி, வேர்க்கடலையை சேர்த்து கலக்கவும்.
➤அதேபோல, வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு, காய்ச்சி கொள்ளவும்.
➤காய்ச்சிய வெல்லப்பாகை மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து எடுத்தால், சுவையான சத்தான ராகி லட்டு ரெடி. SHARE.

error: Content is protected !!