News March 18, 2024
BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
நேற்று முளைத்த காளான் (விஜய்): பிரேமலதா

நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படுகின்றன என்று விஜய்யை பிரேமலதா மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் விரும்பும் கூட்டணியாக தான் தேமுதிக 2026 தேர்தலில் வெற்றி பெறும் என்றும் கூறினார். சமீப காலமாக, பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News November 20, 2025
திருமணமான பெண்ணுடன் உறவு பலாத்காரம் ஆகாது: HC

திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் ஆகாது என்று கேரள HC தெரிவித்துள்ளது. கணவர், 2 குழந்தைகள் இருந்தபோதே வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர், கணவர் இறந்த பிறகும் தொடர்பில் இருந்துள்ளார். தற்போது அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், பலாத்கார வழக்கு தொடர்ந்த நிலையில், கோர்ட் இவ்வாறு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News November 20, 2025
நகைக் கடன்… மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் <<18334761>>1 கிராம் தங்கத்துக்கு ₹7,000<<>> கடன் வழங்கும் நடைமுறை நவ.17 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு, ஏப்ரல் – அக்டோபர் வரை 42 லட்சம் பேருக்கு சுமார் ₹45,000 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தற்போது, நகைக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் லட்சக்கணக்கானோருக்கு பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


