News March 18, 2024
BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
International Roundup: பாலியல் குற்றவாளியுடன் டிரம்ப்

*ஈராக் தேர்தலில் தற்போதைய PM முகமது ஷியா அல்- சூடானி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு. *ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க இன்னும் அதிக அழுத்தம் தர ஜி7 நாடுகள் முடிவு. *பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருந்த ஆவணங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டது. *குவாண்டம் கம்ப்யூட்டருக்கான சோதனை சிப்பை (LOON) கண்டுபிடித்துள்ளதாக IBM அறிவிப்பு. *சூடான் உள்நாட்டு போரை நிறுத்த ஐநா அழைப்பு.
News November 13, 2025
நவம்பர் 13: வரலாற்றில் இன்று

*1935 – பாடகி பி. சுசீலா பிறந்தநாள். *1947 – சோவியத் யூனியன் AK-47 துப்பாக்கியை வடிவமைத்தது. *1958 – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பிறந்தநாள். *1984 – நடிகர் விக்ராந்த் பிறந்தநாள். *1985 – கொலம்பியாவில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர். *1993 – இலங்கையின் ராணுவ கூட்டுத்தளங்களை தாக்கி, ராணுவ தளவாடங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர்.
News November 13, 2025
PAK குண்டு வெடிப்பு: அச்சத்தில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் PAK vs SL ODI தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அங்கு <<18263443>>கார் குண்டு வெடிப்பு<<>> நடந்ததால், இலங்கை வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதனால், உடனே நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டனர். ஆனால், அதை மறுத்த வாரியம், தொடர் முடியும் வரை அங்கேயே இருக்க ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு வழங்குவதாக பாக்., கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


