News March 18, 2024
BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.
News October 14, 2025
BREAKING: TET தேர்வு தேதி அறிவிப்பு

2026-ல் <<17996230>>3 சிறப்பு TET<<>> தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது. இந்நிலையில், உத்தேச தேர்வு தேதியை TRB அறிவித்துள்ளது. ஜனவரி 24 (அ) 25-ம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்றும், ஜூலை, டிசம்பரில் நடைபெறும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்காக சிறப்பு TET தேர்வு நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
BREAKING: விஜய் புதிய முடிவு.. விரைவில் தேதி அறிவிப்பு

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அக்.17-ம் தேதி விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், N.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், விஜய் கரூர் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்திக்கும் புதிய தேதியை ஓரிரு நாள்களில் N.ஆனந்த் தெரிவிப்பார் என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.