News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

image

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.

Similar News

News December 28, 2025

உள்ளூர் போட்டிகளிலும் கெத்து காட்டிய விராட் கோலி

image

சர்வதேச போட்டிகளை தொடர்ந்து, உள்ளூர் தொடர்களிலும் விராட் கோலியும் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார். டெல்லி அணிக்காக VHT-ல் விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் களம் கண்ட 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 2027 WC-ல் பங்கேற்பதற்காக இப்போது உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.

News December 28, 2025

தமிழின் பெருமை, இந்தியாவின் ஒற்றுமை: PM மோடி

image

உலகின் பழமையான மொழியான தமிழை கற்க, நாட்டின் பிற பகுதிகளிலும் ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மன்கி பாத் உரையில், இதுவே மொழியின் வலிமை, பாரதத்தின் ஒற்றுமை என பாராட்டினார். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் என இந்தியா எல்லா துறைகளிலும் முத்திரையை பதித்துள்ளதாக கூறினார். ஆபரேஷன் சிந்துார் நாட்டின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News December 28, 2025

அஜிதா விஜய்யை மதிக்கவில்லை: பெண் நிர்வாகி

image

<<18684988>>அஜிதா<<>> விஜய்யின் காரை வழிமறித்தது, அவருக்கு மதிப்பளிக்காமல் செய்த செயல் என கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு கூறியுள்ளார். இதனால் விஜய் பெண்களை அலட்சியப்படுத்துகிறார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாக கூறிய அவர், தலைமையிடம் பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்றார். மேலும், தலைவரின் காரை மறிப்பது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!