News April 5, 2024
BREAKING: அமைச்சர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

2008இல் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமைச்சர், அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று ஏப்.8ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
OpenAI-க்கு ஆபத்து: ஜார்ஜ் நோபுள்

OpenAI விரைவில் சரிந்துவிடும் என்று பிரபல முதலீட்டாளரான ஜார்ஜ் நோபுள் கணித்துள்ளார். கூகுள் ஜெமினி பயனர்கள் வளர்ந்து வரும் நிலையில், ChatGPT போக்குவரத்து தொடர்ந்து 2 மாதங்களாகக் குறைந்துள்ளது. OpenAI, ஒரே காலாண்டில் $12 பில்லியனை இழந்துள்ளது. திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்போது OpenAI பிழைப்பது கடினம் என்று எச்சரித்துள்ளார்.
News January 22, 2026
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்

உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் தனது முயற்சி குறித்து பேசினார். கிரீன்லாந்து ஒரு பனிக்கட்டி துண்டு என்று குறிப்பிட்ட அவர், அதை கைப்பற்ற தான் பலத்தை பயன்படுத்தவில்லை என்று மறைமுகமாக அச்சுறுத்தினார். மேலும், கிரீன்லாந்தை பாதுகாக்கும் திறன் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இல்லை என்று கூறினார்.
News January 22, 2026
இந்திய வீரர் காயம்

நியூசி.,க்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயமடைந்தார். 16-வது ஓவரில் அவர் வீசிய பந்தை மிட்செல் வேகமாக விளாச, அதை பிடிக்க கையை நீட்டினார். ஆனால், பந்து கையின் நுனியில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதில், அவரது கையில் ரத்தம் வந்து, வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். காயத்தால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


