News August 22, 2025
BREAKING: தெருநாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்திய பிறகு மீண்டும் நாய்களை வெளியில் விட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News August 22, 2025
கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 22, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 22, 2025
BREAKING: இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2023-ல் லண்டனுக்கு அரசுமுறை பயணமாக சென்றபோது இந்திய மதிப்பில், அரசு பணம் சுமார் ₹13,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.