News October 25, 2025
BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News October 25, 2025
அஜித் குமார் மரணம்… அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பன் சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அவர் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 25, 2025
ரத்தத்தில் கையெழுத்து வாங்கும் RB உதயகுமார்

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.
News October 25, 2025
இதெல்லாம் இந்தியா தந்த பரிசு

பண்டைய கால இந்திய கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் சில கண்டுபிடிப்புகள், உலகளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளவை. இதேபோன்று, வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.


