News October 26, 2025
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் நாளை ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இது கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தவெக தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிற நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 26, 2025
பதற்றத்தை குறைக்க சில டிப்ஸ்

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News October 26, 2025
புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 26, 2025
நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?


