News September 2, 2025
BREAKING: செங்கோட்டையன் விலகல்? EPS பதில்

EPS மீது அதிருப்தியில் இருக்கும் <<17589254>>மூத்த தலைவர் செங்கோட்டையன்<<>>, 5-ம் தேதி மனம் திறந்து பேசவுள்ளதாக இன்று காலையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசியலில் பரபரப்பு தொற்றியது; குறிப்பாக அவர் அதிமுகவில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், செங்கோட்டையன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று மாலை பதிலளிப்பதாக EPS தெரிவித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
முதல்வரின் வெளிநாடு பயணம் ஒரு மோசடி: அன்புமணி

CM ஸ்டாலினின் வெளிநாடு பயணம் ஒரு மோசடிப் பயணம் என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், ₹1000 கோடி முதலீடு செய்யவுள்ள Nordex நிறுவனம் சென்னைக்கு அருகிலும், ₹201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst தரமணியிலும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் செய்திருக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்காக CM ஜெர்மனி சென்றது முற்றிலும் வீணானது என்று அவர் சாடியுள்ளார்.
News September 2, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. இறுதி அஞ்சலி

<<17594155>>மறைந்த நடிகர் குரியகோஸ் ரங்கா<<>>(75) உடல் அஞ்சலிக்காக சென்னை அயனம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரைபிரபலங்கள் பலரும் குரியகோஸ் ரங்கா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் சரோஜா தேவி, மதன் பாப், குரியகோஸ் ரங்கா உள்ளிட்ட திரைபிரபலங்களை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. RIP
News September 2, 2025
நீங்கள் இறப்பது போன்று கனவு வருகிறதா?

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவில் வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப்போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இது போன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.