News October 22, 2025

BREAKING: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

TN-ல் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.

Similar News

News October 22, 2025

கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.

News October 22, 2025

இஸ்லாமின் அரசியல் கவனிக்கப்படவில்லை: யோகி

image

இந்தியாவில் சனாதன தர்மத்தை அழிக்க (அ) மட்டுப்படுத்த இஸ்லாம் நினைத்தது என்று உ.பி., CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு எதிராகவே சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பேரரசர்கள் போராடி சனாதன தர்மத்தை நிலைநிறுத்தினர் என்றார். ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவம் பற்றிய வரலாற்றை படிக்கும் நாம், இஸ்லாமின் இதுபோன்ற அரசியலையும் அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News October 22, 2025

FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் மழை காரணமாக சற்றுமுன் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.

error: Content is protected !!