News October 22, 2025
BREAKING: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.15(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
Similar News
News October 23, 2025
இதை செய்யுங்க… உங்க இதயம் நல்லா இருக்கும்!

தொடர்ந்து 40 புஷ்-அப் செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து மிகக் குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். புஷ்-அப் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாம். 1,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 40-க்கு மேல் புஷ்-அப்கள் செய்யும் திறன் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து ஒப்பீட்டளவில் 96% குறைவதாக தெரிய வந்துள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News October 23, 2025
அந்த வலியை பாக்., எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

தற்போது போர்கள் பல்வேறு புதிய பரிணாமங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதனால், பாரம்பரிய பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வேலைக்கு ஆகாது எனவும், அதனால் தான் முப்படைகளுக்கும் தலைமை தளபதி உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய வலியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றும் கூறியுள்ளார்.
News October 23, 2025
ராசி பலன்கள் (23.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.