News April 23, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 24, 2025
அசாமில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சேலம் எம்.பி. பங்கேற்பு

அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று (ஏப்.23) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் மூன்றாவது துணை குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு அசாம் மாநில அரசு சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
News April 24, 2025
இஷான் கிஷன் மீது ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு

MI-க்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ‘#FIXING’ ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், BCCI கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.
News April 24, 2025
பாக். தளபதியின் பேச்சுதான் தாக்குதலுக்கு காரணமா?

காஷ்மீர் சகோதரர்களை பாக். ஒருபோதும் கைவிடாது என அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் பேசியிருந்தார். மேலும், இந்துக்களில் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசிய அடுத்த சில நாள்களில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக். ராணுவ தளபதியே தீவிரவாதிகளை உசுப்பிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.