News September 2, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க, அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சசிகலா, OPS இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்துதான் செங்கோட்டையனும் 5-ம் தேதி பேச உள்ளாராம். இதற்கு EPS சம்மதம் தெரிவிப்பாரா?
Similar News
News September 2, 2025
₹189 ரீசார்ஜில் மாதம் முழுக்க பேசலாம்

சமீபத்தில் ஜியோ நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமான ₹249 திட்டத்தை நிறுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. நீங்கள் வேறு குறைவான ரீசார்ஜ் ப்ளான் தேடினால் ₹189 திட்டம் உங்களுக்கு உதவும். இதில் 28 நாள்களுக்கு எண்ணற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன. அதோடு மொத்தமாக 300 SMS அனுப்பலாம், 2GB நெட் பயன்படுத்திய பிறகு இணைய சேவை 64 Kbps-ல் தொடரும்.
News September 2, 2025
BREAKING: மிலாடி நபி விடுமுறை.. சிறப்பு அறிவிப்பு

மிலாடி நபி(செப்.5) உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. அதன்படி, செப்.4 முதல் 7-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News September 2, 2025
சாயங்காலத்திற்கு பிறகு இதை செய்யாதீங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை 5 மணிக்கு பிறகு 5 விஷயங்களை செய்யக்கூடாதாம். பால், தயிர், உப்பு, சர்க்கரை, மஞ்சள் இவற்றை கடனாகவோ தானமாகவோ அளிக்கக் கூடாது எனவும் அப்படி செய்தால், செல்வ இழப்பை சந்திக்கலாம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேலும், குடும்ப மகிழ்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம். அதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் இதனை கேட்டால் முடிந்தளவு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே கொடுங்கள். SHARE IT.