News October 22, 2025

BREAKING: இன்றும் ரெட் அலர்ட்.. கனமழை பொளந்து கட்டும்

image

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(அக்.23) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்.28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

‘ஆமா, என் மனைவியை நான் தான் கொன்றேன்’

image

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்ராந்த் தாகூர் குடும்ப தகராறில் தனது மனைவியை(36) கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், ‘ஆம், என் மனைவியை நானே கொலை செய்தேன். ஆனால், உள்நோக்கத்தோடு கொலை செய்யவில்லை’ என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு நடந்துவிட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். உடற்கூராய்வு முடிவு கிடைத்தவுடன் கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது.

News January 20, 2026

இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN கண்டதில்லை: SP

image

சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு களங்கத்தை கவர்னர் RN ரவி ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், மரபுப்படி தேசிய கீதம் இறுதியில் பாடப்படும் என சபாநாயகர் கூறியும் கவர்னர் ஏற்கவில்லை என்றும், மைக் ஆஃப் செய்யப்பட்டது என அப்பட்டமாக பொய் பேசும் இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN சட்டமன்றம் இதுவரை கண்டதில்லை எனவும் SP வேதனை தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்கிறேன்: கனிமொழி

image

மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். <<18883288>>ஏ.ஆர்.ரஹ்மான்<<>> நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல; இந்தியாவின் கலாசார விழுமியங்களின் முதன்மையான தூதர் என்று கூறியுள்ளார். தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!