News April 10, 2025
BREAKING: ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காணலாம். இப்போட்டியில் ஆர்சிபி வெல்லுமா, டெல்லி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News April 18, 2025
மனித குலத்தின் அடுத்த மிகப்பெரிய நகர்வு இதுதான்!

பூமி அழிந்தால், மனித குலமும் அத்துடன் அழிந்துவிடும் என்ற கூற்றை திருத்தி எழுதும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியை பெற்று விட்டனர் USA மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். சூரிய மண்டலத்துக்கு வெளியே இருக்கும் K2-18b எனும் கிரகத்தில் குறைந்தபட்சம் நுண்ணிய உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இக்கிரகம் சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், லியோ விண்மீன் கூட்டத்தில் இருக்கிறது.
News April 18, 2025
‘என்னங்க சார் உங்க சட்டம்’ MI-யால் வெடித்த சர்ச்சை!

DC vs RR அணிகளுக்கு எதிரான மேட்ச்சில் DC-யின் ஸ்டார்க் back-foot no-ball வீசினார். ஆனால், அதே மாதிரியான ஒரு பந்தை KKR-க்கு எதிரான மேட்ச்சில் MI-யின் விக்னேஷ் புதூர் வீசியதற்கு நோ-பால் வழங்கப்படவில்லை. இது சர்ச்சையாகி இருக்கிறது. IPL தரப்பில் இந்த சர்ச்சைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவரவில்லை. நெட்டிசன்கள், ‘MI வேலையைக் காட்ட தொடங்கிவிட்டது’ என கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News April 18, 2025
திறப்பு விழா காணும் விழிஞ்ஞம் துறைமுகம்

கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தை வரும் மே 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். அதானி குழுமத்தின் முதலீட்டில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் வகையில் கடந்த ஆண்டு முதற்கட்ட பணிகள் முடிந்தன. சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து வெறும் 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.