News April 15, 2024
BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News December 10, 2025
தஞ்சை: போலி ஆதார் அட்டை தயாரித்தவர் கைது

கும்பகோணத்தில் போலியாக ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை தயாரித்து கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மேலக்காவேரி கடைவீதியில் போலீசார் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, தீவிர விசாரணைக்கு பிறகு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்த அப்துல்காதர் என்பவரை மாவட்ட சிறப்பு தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
வீடுகளின் விலை கணிசமாக உயரும்

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


