News April 15, 2024
BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News November 20, 2025
நடிகை காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

நடிகர் அசுதோஷ் ராணாவுடன் பணிபுரிந்து வந்த இளம் நடிகை அதிதி முகர்ஜி விபத்தில் உயிரிழந்தார். நொய்டாவில் அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் அவரது உயிர் பிரிந்தது. இளம் வயதிலேயே பல நாடக மேடைகளில் தனது அசத்தலான நடிப்பால் பாலிவுட் பட வாய்ப்பை பெற்ற நிலையில், பெரிய திரையில் இடம் பெறாமலேயே வாழ்க்கை முடிந்துவிட்டது. இயக்குநர் அரவிந்த் கவுர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News November 20, 2025
நெல் கிடங்குகளுக்கான ₹309 கோடி எங்கே? அண்ணாமலை

ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு தாமதப்படுத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள் அமைக்க ₹309 கோடி செலவிட்டதாக திமுக கூறுகிறது, ஆனால் விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார். அந்த நிதி எங்கே சென்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
News November 20, 2025
பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.


