News March 20, 2025
BREAKING: கைதியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் தப்பியோடிய கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கைதி ஸ்டீபன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப்பிடித்த நிலையில், காலில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News March 20, 2025
SHARE MARKET-ல் க்ரீன் சிக்னல்… ரூபாய் மதிப்பும் உயர்வு!

தொடர் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள், 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 899 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ், பிப்ரவரிக்கு பிறகு முதல்முறையாக 76,348 புள்ளிகளை தொட்டது. இதேபோல், நிப்ஃடி 283 புள்ளிகள் உயர்ந்து 23,190 புள்ளிகளில் வர்த்தகமானது. மேலும், டாலருக்கு நிகராக ரூபாயில் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.86.46 ஆக உள்ளது.
News March 20, 2025
சிறுவர்களால் விபத்து: தமிழ்நாடு முதலிடம்

18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால் கடந்த ஆண்டில் மட்டும் 11,890 சாலை விபத்துகள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக 2,063 வாகன விபத்துகளும், ம.பி.,யில் 1,138 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டதுடன், சிறார்கள் வாகனங்கள் இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர்களே, நீங்களும் கவனிங்க.
News March 20, 2025
மசூதிகளை விட பள்ளிகளே முக்கியம்: அதிபர் அதிரடி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவின் அதிபர் இப்ராஹிமின் பதிலால் சவுதி அரேபியா அதிர்ந்து போயுள்ளது. அந்நாட்டுக்கு தாங்கள் கொடுத்த நிதியில் 200 மசூதிகளை கட்டுமாறு சவுதி அரேபியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த அதிபர் இப்ராஹிம், தங்கள் நாட்டில் ஏற்கனவே அதிக மசூதிகள் இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பள்ளிகளையும், ஹாஸ்பிடல்களையும் கட்டப் போவதாக தெரிவித்துள்ளார்.