News March 20, 2025
BREAKING: கைதியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் தப்பியோடிய கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கைதி ஸ்டீபன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப்பிடித்த நிலையில், காலில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News September 7, 2025
உலகக்கோப்பை: மாஸ் என்ட்ரி கொடுத்த மொராக்கோ

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, முதல் ஆப்பிரிக்க நாட்டு அணியாக மொராக்கோ கால்பந்து அணி தேர்வாகியுள்ளது. நைஜருக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடருக்குள் நுழைந்துள்ளது. PSG நட்சத்திர வீரர் ஹகிமி இடம்பெற்றுள்ள இந்த அணியானது, 29, 38, 51, 69, 84-வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.
News September 7, 2025
₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
News September 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.