News March 17, 2024
BREAKING: 2ம் கட்ட தேர்தல் பத்திர விவரம் வெளியீடு

2ஆம் கட்ட தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த நன்கொடை விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி அண்மையில் தாக்கல் செய்தது. அதில் சில பகுதிகள், கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன. இதையடுத்து 2வது கட்ட விவரங்களை தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது.
Similar News
News September 3, 2025
TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
News September 3, 2025
ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
50% வரி விதிக்க சொன்னதே மோடி தான்: ஆ.ராசா

50% வரியை டிரம்ப் விதிக்கவில்லை, அதை போடச் சொன்னதே PM மோடி தான் என்று ஆ.ராசா சாடியுள்ளார். USA-வின் கூடுதல் வரிவிதிப்புக்கு எதிராக திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருப்பதாகவும், அம்பானியும் அதானியும் இந்தியாவை வாங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். USA-வின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு என ஸ்டாலின் கூறியிருந்தார்.