News March 30, 2025
BREAKING: பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (மார்ச் 30) அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று(மார்ச் 29) ஒரு லிட்டர் ₹100.90க்கு விற்பனையான பெட்ரோல் இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹101.03க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு லிட்டர் ₹92.49க்கு விற்பனையான நிலையில், இன்று 0.12 காசுகள் உயர்ந்து ₹92.61க்கு விற்பனையாகிறது.
Similar News
News April 1, 2025
ரேப் அல்ல… இயக்குநர் கைதான வழக்கில் திடீர் ட்விஸ்ட்

கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனலிசாவுக்கு பட வாய்ப்பளித்த <<15947316>>சனோஜ் மிஸ்ரா<<>> பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என, புகாரளித்த இளம்பெண் தெரிவித்துள்ளார். சனோஜ் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர், பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
News April 1, 2025
உசைன் போல்ட் தந்தை வெல்லெஸ்லி போல்ட் மரணம்

பிரபல தடகள ஜாம்பவான் உசைன் போல்டின் தந்தை வெல்லெஸ்லி போல்ட்(68) காலமானார். உடல்நலக்குறைவால் ஜமைக்காவின் ஷெர்வுட் கன்டென்ட் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனான உசைன் போல்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வெல்லெஸ்லி போல்ட், ஆரம்பக் காலத்தில் மளிகைக் கடை நடத்தி தனது மகனை உலகறிய செய்த உன்னத தந்தை என்பது கவனிக்கத்தக்கது. #RIP
News April 1, 2025
வாயுக் கசிவு… ஆலை ஓனர் பலி… 60 பேருக்கு என்னாச்சு?

ராஜஸ்தானில் ஆசிட் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவில் ஏற்பட்ட வாயுக் கசிவை கட்டுப்படுத்த முயன்றபோது, ஆலையின் உரிமையாளர் சுனில் சிங்கால் உயிரிழந்துள்ளார். அருகே வசித்த 60-க்கும் மேற்பட்டோர் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஆலையை சுற்றி வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.