News October 21, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள், வகுப்பறைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளாகத்திலுள்ள செடி, கொடிகளை அகற்றவும், திறந்த வெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

image

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.

News October 21, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News October 21, 2025

வீட்டில் நல்லதே நடக்க இதை செய்யுங்க..

image

வீட்டில் நன்மை பெருகவும், தீமை ஒழியவும் படிகார கல் போதுமானது என்று நம்பப்படுகிறது. தொழில் வளர்ச்சி முதல் குழந்தைகளின் கல்வி வரை பலவற்றுக்கும், இந்த படிகார கற்களை வேத காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!