News August 22, 2025

BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News August 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.

News August 23, 2025

அமெரிக்காவுக்கு குட் பை… ஏஞ்செலினா முடிவு!

image

ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.

News August 23, 2025

விபத்தில் உயிரிழந்தால் ₹2 லட்சம்: CM ஸ்டாலின்

image

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை தவிர, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு ₹1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்கு ₹30,000 என்றும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹10,000 வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!