News March 14, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் குறைந்த வாடகை வீட்டில் தங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கான EL சரண்டர் 15 நாள்களுக்கு பணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
Similar News
News July 5, 2025
ராசி பலன்கள் (05.07.2025)

➤ மேஷம் – சுகம் ➤ ரிஷபம் – மகிழ்ச்சி ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – நட்பு ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – உற்சாகம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – நிறைவு ➤ கும்பம் – கவனம் ➤ மீனம் – நன்மை.
News July 5, 2025
பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடிய மைக்ரோசாஃப்ட்

உலகளவில் மிகப்பெரிய IT நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
News July 5, 2025
இறுதி போட்டிக்கு முன்னேறிய திண்டுக்கல்

TNPL குவாலிபையர் 2-ல் திண்டுக்கலுக்கு எதிராக முதலில் விளையாடிய சேப்பாக் 178 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கேப்டன் அபராஜித்(67), ஜெகதீசன்(81) சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினர். தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல்லில், பாபா இந்திரஜித், விமல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். திண்டுக்கல் – திருப்பூர் பைனலில் மோத உள்ளன.