News October 17, 2025
BREAKING: விஜய் உடன் சந்திப்பு.. கண்ணீர் மல்க ஆறுதல்!

கரூர் வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த மதியழகன், பவுன்ராஜை விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எதையும் சமாளிப்போம், நான் இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை அவ்வப்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விரைவில் அவர்களை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, மதியழகனை கண்ணீர் மல்க கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
Similar News
News October 18, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி.. தகவல் வெளியானது

‘V’ என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என விஜய்யின் குடும்ப ஜோதிடர் கணித்துள்ளாராம். இதனால், அந்த எழுத்தில் தொடங்கும் 9 தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘V’ என்ற எழுத்தில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விளவங்கோடு தொகுதிகள் உள்ளன.
News October 18, 2025
நீல மலராக பூத்த மிருணாள்

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டவர் மிருணாள் தாகூர். அந்த படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தாலும், அல்ட்ரா மாடர்ன் உடைகள் தான் மிருணாளுக்கு பிடித்த சாய்ஸ். அந்தவகையில், தீபாவளி ஸ்பெஷலாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி, அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மயிலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நீல நிற சேலையில் ஜொலிக்கிறார் மிருணாள். மேலே Swipe செய்து அதை பாருங்க.
News October 18, 2025
இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இன்று 24 ரயில்கள், நாளை 19 ரயில்கள், 20-ம் தேதி 23 ரயில்கள், 21-ம் தேதி 25 ரயில்கள், 22-ம் தேதி 19 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.