News October 12, 2025

BREAKING: டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம்

image

TASMAC கடைகளில் கூடுதல் பண வசூலை முற்றிலும் ஒழிக்க MRP விலையை ஸ்கேன் செய்து செலுத்தும் புதிய வசதி இந்த வாரத்திற்குள் அமலுக்கு வரவுள்ளது. தற்போதுள்ள கருவிகளில் சில கடைகளில் ₹10, ₹20 கூடுதலாக சேர்த்து வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், ரொக்கப்பணம், டிஜிட்டல் பணம் வசூலுக்கு நவீன ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே சில தினங்களாக நாமக்கல், மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 12, 2025

மே.வங்க வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது

image

மே.வங்கம், துர்காபூரில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், ஆளும் திரிணாமுல் காங்., அரசை சாடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தி உள்ளார்.

News October 12, 2025

கரூர் சம்பவத்துக்கு இவர்தான் காரணம்: நயினார்

image

கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA ஆட்சி அமையும்போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

News October 12, 2025

GAS டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

image

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால், ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மேலும் ஸ்டிரைக் நீடித்தால், சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பேச்சுவார்த்தைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று மாலை அல்லது நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

error: Content is protected !!