News April 25, 2025
BREAKING: லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவ்வமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் அலி என தெரிய வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும், தொடர் எதிர்தாக்குதல் நடவடிக்கைகளால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Similar News
News April 25, 2025
முதல் பந்திலேயே CSK-க்கு அதிர்ச்சி கொடுத்த ஷமி

சென்னை Chepauk மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH இடையிலான போட்டி, இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்துவரும் CSK அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே ர ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் நடையை கட்டினார். தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
PAK-ஐ அடிக்க தமிழ்நாடே போதுமே..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், PAK-ன் நிதிநிலையை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) ₹31.9 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், மஹாராஷ்டிராவின் GSDP ₹42.67 கோடியாகவும், தமிழ்நாட்டின் GSDP ₹31.55 லட்சம் கோடியாக உள்ளது. மஹாராஷ்டிரா எனும் ஒற்றை மாநிலமே, PAK-ன் பொருளாதாரத்தை விட ₹10 லட்சம் கோடி அதிகமாக கொண்டுள்ளது.