News September 28, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

கரூர் துயர சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் அறிவுறுத்தலின்பேரில், ஏற்கெனவே அரசுக்கு எதிராக ஐகோர்ட்டை நாடியுள்ள தவெக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. மேலும், பிரசார கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாகவும், கற்கள் எறியப்பட்டதாகவும் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 29, 2025
Asia Cup: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை 2025-ஐ சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. பாக்.,ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 147 ரன்களை சேஸிங் செய்த இந்தியா, 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 69 ரன்கள் குவித்து திலக் வர்மா வெற்றிக்கு வழிவகுத்தார்.
News September 29, 2025
அக்கறையுடன் விசாரித்த ராகுல் காந்தி: CM ஸ்டாலின்

கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் காந்தி விசாரித்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விசாரித்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை அளித்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.