News September 30, 2025

BREAKING: விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை

image

கரூர் துயர வழக்கில், CM, EPS வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள்; ஆனால் டாப் ஸ்டாரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போலதான். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் எனும்போது 10,000 பேர் என கணித்ததே தவறு. கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News September 30, 2025

உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது: ஹேமமாலினி MP

image

பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என கரூரில் ஆய்வு செய்த MP ஹேமமாலினி சாடியுள்ளார். பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்துபோல் இல்லை என தெரிவித்த அவர், உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: விஜய்

image

தனது பரப்புரையின் போது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களையே தேர்வு செய்வதில் கவனமுடன் இருந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, மக்கள் பாதுகாப்பை மட்டுமே மனதில் கொண்டு பரப்புரைக்கு போலீஸிடம் அனுமதியும், பாதுகாப்பும் கேட்டோம் என்றார். எனினும், கரூரில் நடக்கக் கூடாத துயரம் நடந்துவிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

News September 30, 2025

ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: விஜய்

image

கரூர் துயரச் சம்பவத்தின் போது, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> பேசிய அவர், எங்களின் வலிகளை, நிலைமைகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார். இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் விஜய்மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

error: Content is protected !!